ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்


ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம், புதன்கிழமை காலை வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து காலை, மாலை உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அதைத் தொடர்ந்து மாட வீதியில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருவீதியுலாவும் நடக்கிறது. ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் வரும் 21ஆம் தேதி வரை 10 நாள் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவம் தொடங்கியதை தொடர்ந்து புதன்கிழமை காலை உற்சவர் பவனி வந்தார். மாலை சிம்ம வாகனத்திலும் ஆதிகேசவப் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இக்கோயிலில் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை வைணவ குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு திருஅவதார உற்சவம் 10 நாள்கள் நடைபெறுகிறது.



Leave a Comment