திருமலையில் ராமர் பட்டாபிஷேகம்


திருமலையில் ராமநவமியை தொடர்ந்து ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமிக்கு மறுநாள் தேவஸ்தானம் ராமர் பட்டாபிஷேக வைபவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை இரவு ஏழுமலையான் கோயிலுக்குள் ராமருக்கு ஆஸ்தானம் நடைபெற்றது. இதேபோல் வியாழக்கிழமை இரவு ஏழுமலையான் கோயில் தங்க வாசல் அருகில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமரை எழுந்தருளச் செய்து, அர்ச்சகர்கள் ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடத்தினர்.



Leave a Comment