முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா


மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி பொங்கல்விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்தும் தீச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மானாமதுரை சிவகங்கை மெயின்ரோட்டில் தயாபுரம் பஸ்ஸ்டாப்பு அருகில் உள்ளது முத்துமாரியம்மன் உள்ளது. ஆண்டுதோறும் இக் கோயிலில் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த 15 ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு கோயில் பூசாரி சுப்ரமணியன் தலைமையில் வைகை ஆற்றில் இருந்து அக்னிச்சட்டி, ஆயிரம்கண் பானை, பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீயில் இறங்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.



Leave a Comment