12 ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்


 

ஜாதக ரீதியாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள் மூலம் நிவர்த்திகள் செய்துக்கொள்ளலாம். ஆனால் எந்த ராசிகாரர்கள்  எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம். இந்தப் பதிவின் மூலம் அந்தந்த ராசிகளுக்கான தெய்வங்களும், அவர்களுக்கான சுலோகங்களையும் பார்ப்போம்.

‪‎மேஷம் :

மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகனுக்கான  சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூற துன்பங்கள் நீங்கும்

 

ஷண்முகம் பார்வதீ புத்ரம்

க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்

தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்

வந்தே ஸிவாத் மஜம்

 

ரிஷபம் :

 ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்தும் கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

 

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை

ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

 

மிதுனம் :

 மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

 

கடகம் :

கடக ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு  பவுர்ணமிக்கும்  அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

 

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

 

சிம்மம் :

 

 சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

 

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

 

கன்னி :

 

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

‪‎

துலாம் :

 

துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

 

விருச்சிகம் :

 

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்

வித்யுத் காந்தி ஸமப்ரதம்

குமாரம் சக்தி ஹஸ்தம்ச

மங்களம் ப்ரணமாம்யஹம்.

 

தனுசு :

 

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

 

மகரம் :

 

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

 

கும்பம் : 

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

 

மீனம் :

மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

 

நம்முடைய ராசிக்குரிய சுலோகங்களை, தினமும் பாராயணம் செய்து நம்முடைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவோம்.

 



Leave a Comment