மந்திரங்களின் தாயான காயத்ரி


 

மந்திரங்களின் தாயான காயத்ரி

 

மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா கூறியிருப்பதன் மூலம் நம்மால் காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்துகொள்ள முடிகிறது . மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்குவது காயத்ரி மந்திரம் . மகரிஷி விசுவாமித்திரரால் மக்களுக்கு சொல்லப்பட்டது தான் மகிமை வாய்ந்த இந்த காயத்ரி மந்திரம் .

 

காயத்ரி மந்திரம்:

 

ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் சவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்|

 

காயத்ரி மந்திரத்தின் விளக்கம்:

 

பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

 

24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரதை  தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும் என்றும் ஜபிப்பவர்களுக்கு அளவற்ற சக்தியையும்  , வைராக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை .

 

 சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்களால் போற்றப்படும் காயத்ரி மந்திரம் ,காலையில்  காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டிலும்  காயத்ரிக்குத் தான் முதல் இடம்.

 

ஒரு முறை பிரம்மா புஷ்கரம் என்ற புண்ணிய சேக்திரத்தில் ஒரு யாகத்தை தொடங்கினார் . அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி வராததால் , பிரம்மா தனத்து சக்தியின் பயனால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.காயத்ரி தேவியை நாமகளின் அம்சமாக கொண்டு நான்முகன் தனத்து யாகத்தை நிறைவு செய்தார்  என்கிறது புராணம் .  செந்தாமரையில் எழுந்தருளிய அன்னை ஐந்து திருமுகங்களும் பத்து கரங்களும் கொண்டு அழகே உருவாக திகழ்கிறாள் .

 

சில முக்கிய காயத்ரி மந்திரங்கள்

 

காயத்ரி தேவி மந்திரம்

 

 

ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.

 

 

ஸ்ரீ கணபதி

 

ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.

 

 

ஸ்ரீ விஷ்ணு

 

 

ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி

தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.

 

 

ஸ்ரீ சிவா

 

 

ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி

தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.

 

 

ஸ்ரீ பிரம்மா

 

 

ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய

தீமஹி

தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.

 

 

ஸ்ரீ லட்சுமி

 

 

ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி

தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்

 

 

ஸ்ரீ சரஸ்வதி

 

 

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி

தந்நோ வாணி ப்ரயோதயாத்.

 

ஸ்ரீராமர்

 

ஓம் தாசரதாய விதமஹே

சீதா வல்லபாய தீமஹி

தந்நோ ராமஹ ப்ரசோதயாத்

 

ஸ்ரீசீதா

 

ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே

பூமிஜாயை ச தீமஹி

தன்னோ சீதா ப்ரசோதயாத்

 

 

 ஸ்ரீ ஆதிசேஷன்

(நாக தோஷம் நீங்கிட ஜபிக்கவும்)

 

ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே

விஷ்ணு தல்பாய தீமஹி

தந்நோ நாக ப்ரசோதயாத்

 

 

ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு

(கல்வி வளர)

 

ஓம் வாகீச்வராய வித்மஹே

ஹயக்ரீவாய தீமஹி

தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

 

ஸ்ரீகருடன்

(சர்ப்ப தோஷம் நீங்கிட)

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸீவர்ண பட்சாய தீமஹி

தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

 

ஸ்ரீசரபேஸ்வரர்

(செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க )

ஓம் ஸாலுவே சாய வித்மஹே

பட்சி ராஜாய தீமஹி

தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

 

 

ஸ்ரீஅன்னபூரணி

( என்றும் உணவு கிடைக்க)

 

ஓம் பகவத்யை வித்மஹே

மாஹேச்வர்யை தீமஹி

தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

 

குபேரன்

(செல்வம் பெருக )

 

ஓம் யட்சராஜாய வித்மஹே

வைச்ரவணாய தீமஹி

தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

 

அனுமான்

 (புத்தி, பலம், தைரியம் பெருக)

 

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

 

நந்தீஸ்வரர்

(சிவபெருமான் அருள் கிடைக்க)

 

 

ஓம் தத்புருஷாய வித்மஹே

சக்ரதுண்டாய தீமஹி

தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்

 

தன்வந்திரி

 

(சகல நோய்களும் குணமடைய)

ஓம் தன்வந்தராய வித்மஹே

அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி

தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

                                                        

எமன்

 

(துர் மரணம் நிகழாமல் இருக்க)

 

 

ஓம் வைவஸ்வதாய வித்மஹே

தண்டஹ்ஸ்தாய தீமஹி

தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

 

காயத்ரி என்றால் தன்னை ஸ்மரிப்பவர்களை காப்பாற்றுபவள்  என்று பொருள். காயத்ரி மந்திரம் ஜபித்தால் எடுத்த இந்த பிறவியில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அனுதினமும் நமது இஷ்ட தெய்வதிற்கான  காயத்ரி மந்திரத்தை தூய மனதோடு ஜபித்து சகல சம்பத்துக்களையும் அடைவோம் .



Leave a Comment